ஸ்வாமியை பற்றி
ப்ரம்ம பூத ஸ்ரீ வைத்யநாத ஸ்வாமி நம் முன்னோர்களில் ஒருவரான பொன்மலர்பாளையம் பகுதியில் உள்ள பங்களா தோட்டம் அருகே கன்னி வாய்க்காலின் நீரில் சதுர்வேத ஜபம் செய்து, ஜீவ சமாதியை அடைந்தவர். அவர் பல ஆண்டுகள் பொன்மலர்பாளையம் அக்ரஹாரத்தில் உள்ள பாலாம்பா சமேத ஸ்ரீ வைத்தியனாத ஸ்வாமி திருக்கோயிலில் த தவம் மேற்கொண்டார். முன்பு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு, பிறகு, வெள்ளை உடை அணிந்த யோகியாக மாறிய அவர், உலக வாழ்க்கையின் இன்பங்களைத் துறந்து ஆன்மிக முன்னேற்றத்திற்கும் ஆத்ம ஞானத்திற்கும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். பரிவ்ராஜக நிலையில் தவம் செய்து வந்த அவர், ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராளின் சமகாலத்தில் வாழ்ந்தவர். தேவப் பிரச்னம்ப்படி, அவரது அதிஷ்டானம், காவேரியின் வடக்கு பகுதியிலும் பாலாம்பா சமேத ஸ்ரீ வைத்யநாத ஸ்வாமி திருகோயிலின் தெற்குப் பகுதியில் 108 அடியில் அமைந்துள்ளது. ஸ்ரீ சதாசிவ ப்பிரமேந்திராள், ஜகத்குரு ஸ்ரீங்கேரி ஆச்சாரியர்கள், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், காஞ்சி ஆச்சார்யாள், சத்குரு சுவாமி ஸ்ரீ ஞானானந்த கிரி அவர்களின் அருள்ஆசியாலும், வழிகாட்டுதலையும் பெற்று, முதல் 5 நாட்களில் அனுக்ஞை காப்பு அங்குரார்பணம் ரக்ஷாபந்தனம் கணபதி ஹோமம் மேதா தட்சிணாமூர்த்தி ஹோமம் புருஷ ஸூக்த விதானமாக சாளக்கிராமத்தின் ப்ரதிஷ்டை, பாண லிங்க பிரதிக்ஷை ருத்ர ஹோமம் கலசாபிஷேகம் ஆறாம் நாளில் ஆராதனை ஆகியவைகள் நடைபெறும். இதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாத சுக்லபஷ்ஷ துவாதசியில் அவரது ஆராதனை இரண்டு பிராமணர்களுக்கு அன்னதானத்துடன் பொம்மலபாளயத்தில் நடத்தப்பட வேண்டும். பிராமணர்களின் எண்ணிக்கை கூட்ட பின்னர் அன்றள்ள அறங்காவலர்களால் தீர்மானம் செய்ய முடியும். இத்தொண்டின் அறக்கட்டளை ஆன்மிக நிகழ்வுகளை மேற்கொள்வதுடன், திருமணத்திற்கு தாலி மற்றும் கூரைப் புடவை வழங்குதல், கோசாலைக்கு உதவி, கல்வி உதவி, வேத பரிபாலன ம்ம் மற்றும் தேவைபடும் ஏழைக்கு மருத்துவ உதவி போன்ற தரமங்களை ஆரம்பிக்க விரும்புகிறது. ஆகஸ்ட் 30, 2025 முதல் ப்ரம்ம பூத ஸ்ரீ வைத்யநாத ஸ்வாமி அதிஷ்டான பிரதிஷ்டையிலும் செப்டம்பர் 4,2025 ஆராதனையிலும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். எல்லோரும் வைதீகம் மற்றும் சமூக பணிகளுக்குக்கான அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கலாம்.
View English page →